நவம்பரில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் – மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு !!!
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு உள்ள கல்லூரிகளில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் செயல்பட தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக பள்ளி ஆண்டுத் தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக எடுக்கப்பட்டு வருகின்றன
நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அனைத்து கல்லூரிகளும் அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதலாமாண்டில் சேரும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும், 2021ம் ஆண்டு மார்ச் 8 முதல் 26ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது தற்போது தொடங்கவுள்ள முதலாமாண்டு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு உரிய கல்வி ஆண்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது செமஸ்டர் வகுப்புகள் ஏப்ரல் 5 முதல் தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 9 முதல் 21ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அதிக நாட்கள் மாணவர்கள் விடுமுறையில் இருந்துள்ளதால் வாரத்தின் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக முடங்கிக்கிடந்த கல்வித்துறை தற்போது வேகமெடுப்பதாக தெரிகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்