ஆகஸ்ட் 24 முதல் அரசு பள்ளிகளில் முதல் பருவ தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முதல் பருவத் தேர்வு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும் என பொதுக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல் பருவத் தேர்வு துவக்கம்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா காலகட்டத்தில் பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து முடிந்து புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளும் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கேரளா மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் விடுமுறை முடிந்து கேரளா பள்ளிகள் ஜூன் 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு, 2022-2023 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஒரு சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அரசுப் பள்ளிகளில் முதல் பருவத் தேர்வு ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறும் என பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் மாற்றத்தை கொண்டு வரும் கூட்டுறவுத்துறை – முக்கிய அறிவிப்பு
அதாவது ஓணம் விடுமுறைக்கு பிறகு செப்டம்பர் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் பாலா மறைமாவட்ட கார்ப்பரேட் கல்விச் சங்கம் மற்றும் மாத்ருபாஷா போஷக சன்னதா சமிதி இணைந்து நடத்திய சமக்ர சக்ஷர பால திட்டத்தின் தொடக்க விழாவில் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் மலையாள எழுத்துக்களின் அச்சடிப்பை அமைச்சர் வெளியிட்டார். இதையடுத்து மலையாள எழுத்துக்கள் அடங்கிய பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாய் மொழியை வளர்ப்பதற்கு மேலும் பல திட்டங்கள் திட்டமிடப்படும் என்று திரு.சிவன் குட்டி கூறினார்.