CBSE மாணவர்கள் கவனத்திற்கு – நவ.16 முதல் பருவத்தேர்வு! முழு விபரங்கள் இதோ!

0
CBSE மாணவர்கள் கவனத்திற்கு - நவ.16 முதல் பருவத்தேர்வு! முழு விபரங்கள் இதோ!
CBSE மாணவர்கள் கவனத்திற்கு - நவ.16 முதல் பருவத்தேர்வு! முழு விபரங்கள் இதோ!
CBSE மாணவர்கள் கவனத்திற்கு – நவ.16 முதல் பருவத்தேர்வு! முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு வரும் நவம்பர் 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வில் தவறாக பதில் அளித்திருந்தால், அதை சரி செய்யும் வகையில் மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. முதலில் மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது. அதன் பிறகு படிப்படியாக அனைத்து மாநிலங்களும் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. மாணவர்களுக்கு மதிப்பீடு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாநிலங்களாக முதல் கட்டமாக மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்கியது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு – நவம்பர் 30க்கு பின் நீட்டிப்பு கிடையாது!

தற்போது நான்கு மாதங்களாக மேல்நிலை வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வி வாரியம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நடத்த திட்டமிட்டு அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் படி கொள்குறி வகை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் தவறாக பதில் அளித்தால் அவற்றை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் 10.63 லட்சம் பேருக்கு ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு – தணிக்கை செய்து பெயர் நீக்க உத்தரவு!

அதாவது ஓ.எம்.ஆர் ஷீட்டில் ஏ, பி, சி, டி என நான்கு வட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது சரியோ அந்த வட்டத்தை பால் பாயிண்ட் பேனா மூலம் நிரப்ப வேண்டும். ஒருவேளை தவறாக பதில் அளித்தால் ஏ, பி, சி, டி அருகே ஐந்தாவதாக சதுர வடிவ கட்டம் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஏ, பி, சி, டி இதில் எது சரியோ அதை எழுத வேண்டும். உதாரணமாக ‘ஏ’க்கு பதில் ‘பி’ தான் சரி என நினைத்தால், ‘பி’ என சதுர கட்டத்தில் எழுத வேண்டும். மதிப்பீடு செய்யும் போது மாணவர்கள் சதுர கட்டத்தில் எழுதிய விடை கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். தேர்வு முடிந்ததும் அன்றைய தினமே தேர்வு மையத்தில் ஓ.எம்.ஆர். ஷீட் திருத்தப்பட உள்ளது. விடைத்தாள் திருத்தும் முறை பற்றிய வீடியோ, ஓ.எம்.ஆர்.ஷீட் மாதிரியை ஆசிரியர், மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!