நிரப்பப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடம் – முதல் பெண் தலைமை நீதிபதி கவுரவம் யாருக்கு?
இந்தியாவில் காலியாக உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை பரிந்துரை செய்துள்ளதாக நீதிபதிகள் அடங்கிய குழு (கொலிஜியம்) அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி:
நாட்டில் தற்போது ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்புவதற்கு இந்திய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான ஒரு குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அந்த குழு தற்போது மத்திய அரசிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையில் மூன்று பெண் நீதிபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் காலிப்பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்ள ஒரு பெண் 2024-ல் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை அடைய உள்ளார்.
மருத்துவ படிப்புகளில் 50% இட ஒதுக்கீடு வழக்கு – ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு!
இந்த சிறப்பை பெறும் பெண்மணி பி.வி.நாகரத்னா ஆவார். இவர் 2008-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்து நிரந்தர நீதிபதியானவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரது தந்தையும் 1989-ல் ஜூன் முதல் செப்டம்பர் வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஈஎஸ் வெங்கட்ராமையா என்பது சொல்ல தகுந்தது. இதற்கு முன்னோட்டமாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ போப்டா அவர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பெண் நியமனமாகும் காலம் வந்து விட்டது என்று தெரிவித்து இருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த பட்டியலில் மேலும் தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பெல்லா திரிவேதி போன்றோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இதை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இந்திய தலைமை நீதிபதியோடு சேர்த்து நீதிபதிகள் உதய் உமேஷ் லலித், ஏ.எம் கான் வில்கர், டாக்டர் தனஜ்ஜெய ஒயிட் சந்திரசூட் மற்றும் எல் சந்திர சேகர ராவ் என ஐந்து நீதிபதிகள் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.