தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் – விரைவில் அறிவிப்பு!
நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட இருக்கிறது தீபாவளி பண்டிகை. சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க பட்டாசு வெடிப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்குரிய பட்டாசு வெடிக்கும் நேரம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி:
நாடு முழுவதும் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. பண்டிகை நாளன்று மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகள் இல்லாத தீபாவளி திருநாளை நினைத்து பார்ப்பது சற்று கடினமான ஒன்று. இருப்பினும் காற்று மாசுபடுவதை குறைக்க பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்னும் இந்த தடை அமலில் இருந்து வருகிறது.
நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வருவதால் பலர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் கூடுவது மற்றும் கோயில்கள் திருவிழாக்கள் முதலியவற்றில் பொதுமக்கள் கூடுவதற்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இது பண்டிகை காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு – அமைச்சர் அறிவிப்பு!
பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி, 2018 முதல் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பட்டாசு தொடர்பான குறும்படம் வழியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.