தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை – மீறினால் சிறை தண்டனை! அரசு அறிவிப்பு!
இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக 2023 ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க தடையை நீக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் டெல்லி அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிறை தண்டனை:
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. இந்த மாசு நிறைந்த காற்றினை சுவாசிப்பதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும் பலர் சுவாச கோளாறு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பட்டாசு வெடிக்க முற்றிலும் தடை விதித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
வரும் 2023 ஜனவரி 1ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு அக். 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபடவுள்ளதால் இதனை முன்னிட்டு பட்டாசு வெடிக்க அறிவிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரி பலரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் டெல்லியில் விதியை மீறி பட்டாசுகளை வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பட்டாசுகளை வாங்கினாலோ, வெடித்தாலோ ரூ. 200 அபராதமும் விதிக்கப்படும். மேலும் பட்டாசு தயாரித்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 3 வருடம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.