அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது FIR தாக்கல் – லட்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!
தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியதன் மூலமாக ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
FIR அறிக்கை:
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது சுமத்தப்பட்ட தொடர் புகார்கள் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது சொத்து விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் தனது நெருக்கமானவர்களுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அளித்ததன் மூலம் ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 முதல், செப்டம்பர் 21ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!
மேலும் கோவையில் எஸ்.பி வேலுமணிக்கு தொடர்புடைய 35 இடங்கள், சென்னையில் 16 இடங்கள் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் உட்பட மொத்தம் 53 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அளவில் டெண்டர்கள் கொடுத்ததும் பிற நிறுவனங்களை புறக்கணித்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த அவர் தனது சகோதரர் அன்பரசன், பினாமி நிறுவனங்களுடன் இணைந்து அரசு விதிகளை மீறி ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டதாக எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் ரூ.464 கோடியும், கோவை மாநகராட்சியில் ரூ.346 கோடியும் என மொத்தம் ரூ.811 கோடிக்கு ஊழலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.