தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை – நேற்று முதல் அமல்!

0
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை - நேற்று முதல் அமல்!
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை - நேற்று முதல் அமல்!
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை – நேற்று முதல் அமல்!

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கைரேகை பதிவு முறை அமலுக்கு வந்தால் அட்டைதாரர்கள் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன்:

தமிழகத்தில் மொத்தமாக 34,773 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2,09,45,217 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. பருப்பு, சர்க்கரை, பாமாயில் குறைந்த அளவே வழங்கப்படுகிறது அதற்கு பணம் வழங்க வேண்டும். 2 கேஸ் சிலிண்டர் இல்லாதவர்களின் வீடுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

பிரிட்டனில் பயிலும் இந்திய கல்வியாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ஆண்டு பணி விசா வழங்கல்!

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி கைரேகை மூலமாக ரேஷன் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கைரேகை முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நேற்று முதல் அவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் பிற மாநில கார்டுதாரர்கள் தமிழக ரேஷன் கடைகளிலும் அத்தியாவசிய பொருள்களை வாங்கலாம். இதற்காக அனைத்து கடைகளிலும் கைரேகை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!