தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை – இன்று முதல் கட்டாயம்!
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இன்று (ஜூலை 1) முதல் கை விரல் ரேகை வைக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்களை வழங்குவதற்கு இந்த நடைமுறை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
கைவிரல் ரேகை:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காலத்தில் மாநில மக்கள் அனைவரும் மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதை கருத்தில் கொண்டு மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் ரூ.4000 (இரண்டு தவணையாக) நிவாரண நிதியும் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். அதன் அடிப்படையில் கடந்த மே மாதத்தில் நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்!
இதையடுத்து கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை ரூ.2000 மற்றும் 14 வகை அடங்கிய மளிகை பொருட்கள் கடந்த ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டு வந்தது. தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் எனில் அதற்கு குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். ஆனால் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால் மக்கள் நெடு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உண்டு.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக கை விரல் ரேகை நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (ஜூன் 30) முதல் நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மீண்டும் கைவிரல் ரேகை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி இன்று (ஜூலை 1) முதல் அனைவரும் கைவிரல் ரேகை வைத்தால் தான் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.