சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை!

0
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் அரசு மற்றும் தனியார் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி அபராதம்:

தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் சாலை ஓரங்கள் குப்பை குவியலாக காட்சி அளிக்கிறது. குப்பை தொட்டிகளில் கொட்டாமல் குப்பையை தூக்கி எறிவதால் கண்ட இடத்தில் குப்பை விழுந்து இடத்தை அசுத்தம் செய்கிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் அப்பகுதியில் செல்வோருக்கு முக சுளிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பைகளில் உள்ள கிருமிகள் பரவி உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. இதனை தடுப்பதற்காக நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

குப்பை வண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர். பொது இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்கப்பட்டு அதில் குப்பைகளை போடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் சிலர் அதை பின்பற்றுவது இல்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பொது இடங்களில் குப்பைகளை போடுபவர்களுக்கு அபராதத்தை விதித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் / வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் ஊழியர்களுக்கு 3 போனஸ் – வெளியான சூப்பர் தகவல்!

மேலும் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டுபவர்கள் மற்றும் தனி நபர்களுக்கு 100 ரூபாய் அபராதம், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்போர்க்கு 1000 ரூபாய் அபராதம், பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் மேலும் பொது இடங்களில் கட்டுமான மற்றும் ஈடுபாடு கழிவுகளை ஒரு டன் வரை கொடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் , ஒரு டன்னுக்கு மேல் 5000 ரூபாய் , தோட்ட கழிவுகள், மரக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு 200 ரூபாயும் கழிவுநீர் பாதை / கால்வாய் நீர் நிலைகளில் குப்பை கொட்டுபவர்கள் 500 ரூபாயும், திடக்கழிவுகளை எரிப்பவர்கள் தனியார் இடங்களில் ரூ.500, பொது இடங்கள் ரூ.1000 அபராதம் என என சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!