ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – இணைக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள்!
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து கால அவகாசம் அளித்து வருகிறது. கால அவகாசத்திற்கு பிறகு இப்பணியை மேற்கொள்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பான் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் நம்பர் செயலிழந்து போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் – ஆதார்:
இந்தியாவில் ஆதார் அட்டை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது நாட்டில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி ,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும், பிற வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியமாக உள்ளது. இந்த ஆதாரில் ஆன்லைன் மூலம் தேவைக்கேற்ப விவரங்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இசேவை மையம், ஆதார் மையம் மற்றும் அஞ்சலகங்களில் ஆதார் விவரங்களை மாற்றலாம். ஆதாருக்கு அடுத்ததாக பான் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.
கொரோனாவை தடுக்க மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் – பீதியில் பொதுமக்கள்!
10 இலக்க எண்களை கொண்ட நிரந்தர கணக்கு எண் பான் கார்டு எனப்படும். இந்த பான் எண் அனைத்து வங்கி பரிவர்தனைகளுக்கும், அரசின் வரிகளை செலுத்துவதற்கும் கட்டாயம். வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான் கார்டு எண் கட்டாயமாகும். வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் எண்ணுடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு கால அவகாசத்தை அளித்தது மேலும் காலக்கெடுவை நீட்டிப்பும் செய்தது. கொடுக்கப்பட்ட காலத்திற்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இல்லையெனில் பான் நம்பர் செயலிழந்து போகும் இதனால் வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போகும், நிலுவையில் உள்ள வருமானம் மற்றும் பணத்தைத் திரும்ப பெற முடியாத விகிதத்தில் வரி விலக்குகளை பெற நேரிடும். பான் கார்டுடன் ஆதாரை இணைக்க விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக அதை எளிதாக செய்யலாம். www.incometax.gov.in என்ற இணையதளத்தின் லிங்க் ஆதார் விருப்பத்தை தேர்தெடுத்து பான் எண், ஆதார் டேட்டா, பெயர் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடு பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்.