ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – போர்டிங் பாய்ண்ட் மாற்றினால் அபராதம் கிடையாது!
IRCTC மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு எந்த ரயில் நிலையத்தில் இருந்தும் பயணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித அபராத கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறை கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பெரும் சரிவை சந்தித்தது. தொற்று அச்சத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முக்கிய வழித்தட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு வைரஸ் பரவல் சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு படிப்படியாக ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வண்ணம் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தமிழகத்தில் 6000 காலிப்பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – எங்கு தெரியுமா?
இந்த ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் தொடங்கப்பட்டது. ரயிலில் பயணிக்க விரும்புவோர் ஐஆர்சிடிசி கணக்கு தொடங்கி அதன் மூலம் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது மூலம் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு பதிலாக வேறு ரயில் நிலையத்திலும் இருந்து பயணம் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
போர்டிங் ஸ்டேஷன் பயணிகளுக்கு வெகு தூரத்தில் இருப்பதால், ரயிலை தவற விட வாய்ப்புள்ளது. அதனால் தற்போது வழங்கப்பட்ட சலுகையின் படி பயணிகள் சென்றடையும் இடத்தில் ரயில் நின்றால் அந்த இடத்திலேயே பயணிகள் ஏறிக் கொள்ளலாம். ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே மேற்கண்ட முறை பொருந்தும். போர்டிங் பாயிண்ட் மாற்றிக் கொள்வதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.