தமிழக அரசு வழங்கும் 1000 ரூபாய் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அரசு உதவித்தொகை:
தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போது வேலைவாய்ப்பற்ற ஊனமுற்றவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் போதிய ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ள முடியும். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் குறைந்த விலையில் அறிமுகம்? சிறப்பம்சங்கள் என்னென்ன!
அதன்படி 1-ம் முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாய் மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு 750 ரூபாய், பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு 1000 ரூபாய் என 3 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்கள் அரசின் வேறு எந்த உதவித் தொகையும் பெறக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற விரும்பும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் 45 வயதிற்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் அவசியமாகும்.
TN Job “FB Group” Join Now
இந்த உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. இந்த உதவித்தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும். வேறு அரசு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் இந்த அலுவலகத்தில் உதவித்தொகை பெற இயலாது. இதனை தொடர்ந்து உதவித்தொகை பெற தகுதிகள் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.