தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு இறுதி முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து முதலவர் முக ஸ்டாலின் அவர்கள் இறுதி முடிவை அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா 2வது அலையை தடுக்கும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு தடுப்பூசி செலுத்துதல் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அரசின் இந்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக தினசரி 30 ஆயிரம் வரை பதிவாகி வந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டது.

TNPSC குரூப் 4 VAO தேர்வு பாடத்திட்டம், கட்-ஆப் மதிப்பெண்கள் – முழு விபரம் இதோ!

அதன் அடிப்படையில் செப்.1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டனர். இதற்கிடையில் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதனால் அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். பெற்றோர்கள் பலரும் இதையே வலியுறுத்தி உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இணையவழி மோசடி ‘உஷார்’!

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேசுகையில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட அனைவரிடமும் கருத்துகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்படும். பின்னர் முதல்வரின் இறுதி முடிவின் பேரில் பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதனால் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!