தமிழகத்தில் அரசு கலை & அறிவியல் கல்லூரிகளுக்கான இறுதி பட்டியல் – இன்று வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான இறுதி பட்டியல் இன்று வெளியிடப்போவதாக கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இறுதி பட்டியல்:
தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளை காட்டிலும் கலை, அறிவியல் படிப்புகளில் தான் சேர தான் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் மொத்தமாக பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி ஆகிய படிப்புகளுக்கு 1.25 லட்சம் காலியிடங்கள் உள்ளன. ஆனால், 1.25 லட்ச காலியிடங்களுக்கு இதுவரைக்கும் 4 லட்சத்திற்கும் மேலான மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
மேலும், அந்த மாணவர்களில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் கல்லூரி கட்டணம் செலுத்திவிட்டனர். இந்நிலையில் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்த தரவரிசை பட்டியல் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்களின் இறுதி பட்டியலை இன்று இணையதளத்தில் வெளியிட போவதாக கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை: ஆடி பெருக்கு அன்று அதிரடியாக குறைந்த தங்க விலை – மகிழ்ச்சியில் பொதுமக்கள்
மேலும், இந்த தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் தான் மாணவர்கள் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற இருப்பதாக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவனின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு எந்த தேதியில் மாணவன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற செய்தி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.