தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆக.20ம் தேதி இறுதி முடிவு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், வரும் ஆக.20ம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் மெல்ல குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் மற்ற மாநிலங்களில் பள்ளிகளை திறப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்க உத்தரவு!
இதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 16ம் தேதியான நேற்று முதல் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகளில் முதலாம் ஆண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது.
தமிழகத்தில் கடந்த வாரம் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஊரடங்கு நடப்பதினால் நேரடி வகுப்புகள் இல்லாத நிலையில், முழு பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது என்று அதிகபட்சம் 50% வரையிலான பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்டமாக பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடக்க இருப்பதாகவும், கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும். அதன் பின்னர் பள்ளிகள் திறக்கும் தேதி பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.