செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாள் – தங்க பதக்கத்தை வென்ற தமிழக வீரர்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நாளான இன்றும் இந்தியா ஏகப்பட்ட பதக்கங்களை வென்று குவித்துள்ளது. அதில், தமிழக வீரரான குகேஷ் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முதன்முறையாக இந்தியாவில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 188 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட செஸ் வீராங்கனைகள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்றுள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று நடைபெற இருக்கிறது.
TNPSC Group II தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? தேர்வாணையம் விளக்கம்!
அதாவது, செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வழங்க இருக்கிறார். மேலும், விழாவின் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.தோனி கலந்துகொள்ள இருக்கிறார். இறுதி நாளிலும் கூட இந்தியா பதக்கங்களை வென்று குவித்துள்ளது.
அதாவது, இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியா வெண்கலப் பதக்கங்களை வாங்கியுள்ளது. ஆடவர் பிரிவில் இந்தியா பி அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார் மற்றும் பிரக்ஞானந்தா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.