மல்லிகா மீண்டும் வந்துவிட்டதை அறிந்து கொண்டு சண்டை போடும் காதாம்பரி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி சீரியலில் சத்யா தான் சக்தி என்பதை காதாம்பரி தற்போது அறிந்து கொள்கிறார். மீண்டும் என்னுடைய வாழ்க்கையை அழிக்க வந்துவிட்டாயா என மல்லிகாவிடம் காதாம்பரி முரட்டுத்தனமாக சண்டை போடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மௌன ராகம் சீசன் 2:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீசன் 2 தொடர் பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மல்லிகாவை தான் கார்த்திக் கிருஷ்ணா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மல்லிகா கர்ப்பமாக இருந்த போது சென்னைக்கு சென்ற கார்த்திக் கிருஷ்ணா கட்டாயத்தின் பேரில் காதாம்பரியை திருமணம் செய்து கொள்கிறார். காதாம்பரியை திருமணம் செய்து கொண்டாலும் கார்த்திக் கிருஷ்ணா முழுக்க முழுக்க மல்லிகாவை மட்டுமே நினைத்து கொண்டிருக்கிறார். மல்லிகாவை முழுமையாக கார்த்திக் கிருஷ்ணா வாழ்க்கையில் இருந்து விரட்ட வேண்டும் என காதாம்பரி முயற்சி செய்தார்
Exams Daily Mobile App Download
ஆனால் மல்லிகா தானாகவே கார்த்திக் கிருஷ்ணாவை விட்டு விலகி சென்றுவிட்டார். சக்தியையும் ஒரே ஆளாக வளர்த்தார். முழுக்க முழுக்க கார்த்திக் கிருஷ்ணா சக்தி என்ன செய்து கொண்டிருப்பார் எனவும், மல்லிகா என்ன செய்து கொண்டிருப்பார் என நினைத்து கொண்டிருப்பார். கார்த்திக் கிருஷ்ணா நம்மை பற்றி யோசிக்காமல் எப்போதும் மல்லிகாவையும் சக்தியை பற்றி மட்டுமே யோசிக்கிறாரே என காதாம்பரி அவ்வப்போது சண்டை போட்டு கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளாக மல்லிகாவும், சக்தியும் கார்த்திக் கிருஷ்ணாவை பிரிந்து தூரமாக சென்று விட்டனர்.
பாக்கியாவுடன் ராதிகா இருப்பதை பார்த்துவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!
பின்பு, எதிர்பாராத விதமாக கார்த்திக் கிருஷ்ணாவின் இசை கல்லூரியிலேயே ஷக்தி வேலைக்கு சேருகிறார். அதாவது சத்யாவின் பெயரில் சென்னைக்கு வந்தால் பிரச்சனை என சத்யா என பெயர் மாற்றி கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே காதாம்பரிக்கு இவள் தான் சக்தியாக இருப்பாளோ என்கிற சந்தேகம் இருந்தது. தற்போது சத்யா தான் சக்தி என்பதை அறிந்து கொண்டு மல்லிகாவிடம் சென்று என் வாழ்க்கையை விட்டு போக மாட்டாயா என மல்லிகாவுடன் மல்லுக்கட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.