அசுர வேகத்தில் குழந்தைகளுக்கு பரவும் காய்ச்சல் – பள்ளி விடுமுறை நீட்டிப்பு? பெற்றோர்கள் அச்சம்!
புதுச்சேரியில் அதிக அளவில் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல் பாதிப்புகள்:
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு வருவது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பத்தில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் காய்ச்சல் ஏற்பட்டு வந்ததால் யாரும் இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதன்பிறகு தினசரி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், புதுவையில் காய்ச்சல் அதிக அளவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக முன்னதாக கடந்த செப்டம்பர் 17ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டது. இதனால் காய்ச்சல் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு.. அதிகரிக்கும் மோசடி? தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஆனால், புதுவை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இதுவரை மொத்தம் 747 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில், 50 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் 200 குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விட்ட போதிலும் குழந்தைகள் அதிக அளவில் காய்ச்சலுக்கு உள்ளாவதால் பள்ளிகளுக்கான விடுமுறை காலம் மேலும் நீடிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்