தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் – ஒரு நாளில் 100 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி!

0
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் - ஒரு நாளில் 100 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் - ஒரு நாளில் 100 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் – ஒரு நாளில் 100 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல்:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம், குறைந்த இந்த வேளையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என பலருக்கு சளி இருமல் காய்ச்சல் பரவி உள்ளது. தற்போது ஆங்காங்கே இந்த மர்ம காய்ச்சல் பரவி வருவதால், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டும் இல்லாமல் இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

செப்டம்பர் 26 முதல் 14 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு விடுத்த அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

கடந்த இரு ஆண்டுகளாக இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது அதிகளவில் பரவி வருவது அனைவர் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது, குழந்தைகளுக்கு பரவி உள்ள வைரஸ் எந்த வகையானது என்பது குறித்து அறிய பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றில் இருந்து தப்பிக்க கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!