தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!

0
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு - கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு - கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!
தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து!

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறி வசூலிக்கப்படும் கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

கல்லூரி கட்டணம்:

கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொறியியல் படிப்புகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அக்.9 முதல் 10 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – தசரா பண்டிகை எதிரொலி!

மேலும் அந்த மாணவர்களுக்கான கல்லூரி கட்டணத்தை அரசே ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்திய நிலையில் அரசின் உத்தரவை மீறி சில கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை மீறி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரங்களுக்கான விடுமுறை பட்டியல்!

இது குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களை கட்டணம் செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். அரசின் உத்தரவை மீறி கட்டணம் வசூலித்தால் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், ஏஐசிடிஇ வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து இருந்தால் அதை திரும்ப வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!