தமிழக தனியார் பள்ளிகளில் கட்டணத்தில் விலக்கு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து விரிவான விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு:
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகையே வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொற்று நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல போராட்டங்களை எதிர்கொண்டன. மேலும் மருத்துவ உலகம் இந்த நோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் தற்போது நிலை சிராகி வருகிறது. இருப்பினும் நோய் தொற்று உருவ மாற்றமடைந்து பரவி கொண்டுதான் இருக்கிறது. அதாவது மனித வரலாற்றை திரும்பி பார்க்கையில் அண்மைக்காலத்தில் அச்சுறுத்திய சார்ஸ், எபோலா வைரஸ் மட்டும் அல்லாது, கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் இடம்பெற்றுள்ளது .
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் போது கொத்து கொத்தாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனவை கட்டுக்குள் வைக்க பல முயற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளனமான குழந்தைகள் தவித்தனர். அந்த சூழலில் தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை அளிக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தாய், தந்தை என இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாயும், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு
அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிப்பை தொடருவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.