தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
தமிழகத்தில் பயன்படுத்தப்படும் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு குறிப்பிட்ட அளவிலான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் சேவை:
பொதுவாக வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு உடனடி மருத்துவ தேவை ஏற்பட்டால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும், ஒரு மருத்துவமனையில் இருந்து நோயாளியை இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும், சாலைகளில் விபத்துகளில் சிக்கும் நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கும், வழியில் தேவையான முதலுதவிகளை செய்வதற்கும் ஆம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது.
அரசு சார்பில் இலவசமாக 108 ஆம்புலன்ஸ் சேவைகள் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது. தனியார் மருத்துவனைகளின் ஆம்புலன்ஸ் சேவைகளும் தமிழகத்தில் உள்ளது. தற்போது கொரோனா தொற்று காலமாக உள்ளது. இதனால் மருத்துவ தேவைகள் அதிகமாகியுள்ள நிலையில், ஆம்புலன்ஸ்களுக்கான தேவைகளும் அதிகரித்து உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நோயாளிகளை அழைத்து செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.