தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டு விழா!!!
நன்றி கூட்டம்:
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பல திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டி.சி.இளங்கோவன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) முடிவுகள் வெளியீடு – தேர்ச்சி சதவீதம் குறைவு!!
அதில், எங்களின் கோரிக்கையை ஏற்று 2011 ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு கட்டப்பட்ட திட்டமில்லா பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை நகர்ப்புற ஊரமைப்புத் துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக் கொள்ள அரசாணை வெளியிட்டும், கட்டட அனுமதிக்க கோரி, இதுவரை விண்ணப்பிக்காத கல்வி நிறுவனங்களுக்கு, விண்ணப்பிக்காத கால அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்களுக்கு, கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலகத்துக்கு கல்வி நிறுவனங்களை தயார்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டு விழா ஆகிய இரண்டு நிகழ்வுகளும் பிப்ரவரி 27ம் தேதி காலை 9:15 மணிக்கு சென்னை திருவான்மியூரில் நடக்க உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்