மத்திய அரசின் PM கிசான் ரூ.2000 தவணைப்பணம் இன்னும் கிடைக்கவில்லையா? புகார் செய்ய எளிய வழிமுறைகள்!

0
மத்திய அரசின் PM கிசான் ரூ.2000 தவணைப்பணம் இன்னும் கிடைக்கவில்லையா? புகார் செய்ய எளிய வழிமுறைகள்!
மத்திய அரசின் PM கிசான் ரூ.2000 தவணைப்பணம் இன்னும் கிடைக்கவில்லையா? புகார் செய்ய எளிய வழிமுறைகள்!
மத்திய அரசின் PM கிசான் ரூ.2000 தவணைப்பணம் இன்னும் கிடைக்கவில்லையா? புகார் செய்ய எளிய வழிமுறைகள்!

மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 11வது தவணைப்பணம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பணம் உங்கள் கணக்கிற்கு வரவில்லை என்றால் இது தொடர்பான புகார்களை செலுத்தும் எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

PM கிசான் தவணை

சமீபத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 11வது தவணையாக ரூ.2,000 பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பணம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த மே 31ம் தேதி அன்று விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இப்போது, மத்திய அரசின் இந்த 11வது தவணைப் பணம் கிட்டத்தட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கிடைத்துள்ளது, என்றாலும் இத்திட்டத்தில் தொடர்புடைய சில விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 11வது தவணைப் பணம் இன்னும் வரவில்லை.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கிசான் திட்டத்தின் ரூ.2000 தவணைப்பணத்தை இன்னும் பெறாத விவசாயிகள் இது குறித்த புகார்களை அரசு வழங்கிய மொபைல் எண் மற்றும் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலம் தெரியப்படுத்தலாம். இப்போது அரசு அறிவித்த இந்த பட்டியலில் உங்கள் பெயர் இருந்து இன்னும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் பெறவில்லை என்பது தெரிந்தால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து உதவி பெறலாம். மேலும் கட்டணமில்லா எண் 011-24300606 மற்றும் ஹெல்ப்லைன் எண் 155261 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

திருவள்ளூரில் நாளை (ஜூன் 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை!

தவிர [email protected] என்ற மின்னஞ்சல் ஐடியின் மூலமும் உதவியைப் பெறலாம். மறுபக்கத்தில் உங்கள் ஆதார் எண் அல்லது பெயர் தவறாக இருந்தால், அதை சரிசெய்ய நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.inக்கு செல்ல வேண்டும். இப்போது திறக்கும் பக்கத்தின் மூலையில் கிளிக் செய்யவும். அதன் பிறகு ஆதார் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும். தொடர்ந்து உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சாவை நிரப்புவதன் மூலம் உங்களின் தொடர்புடைய தகவல்களை சரிபார்க்கலாம். இது தவிர ஏதேனும் ஒரு தகவல் தவறாக இருந்தால் அதையும் திருத்திக் கொள்ளலாம்.

இப்போது வங்கி விவரங்களை ஆன்லைனில் திருத்த முடியாது. உங்கள் வங்கி விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால், அதை சரிசெய்ய வேளாண் துறை அலுவலகம் அல்லது லெக்பாலை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், இப்பிரச்சனை தொடர்பாக விவசாயிகள் அமைச்சகம் வழங்கிய உதவி எண்ணிலும் புகார் செய்யலாம். இது தவிர, PM கிசான் கட்டணமில்லா எண் – 18001155266, PM கிசான் ஹெல்ப்லைன் எண் – 155261, PM கிசான் லேண்ட்லைன் எண்கள் – 011-23381092, 23382401, PM கிசான் புதிய ஹெல்ப்லைன் – 011-24300606 மற்றும் PM 90 உதவி எண் – 24300602 ஆகியவற்றை அழைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!