வெளிநாட்டு பயணிகளுக்கு செப்.30 வரை விசா நீட்டிப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளின் விசா காலக்கெடுவை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விசா நீட்டிப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உருவான கொரோனா பேரலை காரணமாக சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த சேவைகள் இன்று வரை முழுமையாக துவங்கப்படாத பட்சத்தில், இந்தியாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகளின் விசா காலக்கெடுவை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர், பல்வேறு விசாக்கள் மூலம் இந்தியாவுக்கு வந்தவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத சூழல் காணப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் கொரோனா காரணமாக அதிகரிப்பு – மாநில தேர்தல் ஆணையம்!
அதாவது கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் துவங்காததால் பலர் இந்தியாவிலேயே தங்கி இருக்கின்றனர். அப்படி இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களது வழக்கமான விசா அல்லது தங்கும் காலத்தை மத்திய அரசு தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த இந்த சேவைகள் தற்போது செப்டம்பர் 30 வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும் பங்குகள் விற்பனை – கையகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ்!
இந்த காலக்கெடு நீட்டிப்பிற்காக வெளிநாட்டு பயணிகள் எந்தவொரு விண்ணப்பத்தையும் செலுத்த தேவையில்லை. மேலும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் அதற்காக அனுமதி கோரலாம். இதற்கிடையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின்னர் இந்தியாவிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவர்கள் விசா நீட்டிப்புக்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் இந்தியாவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களின் கீழ் விசா நீட்டிப்பு வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளது.