மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதி இடைக்கால தடை? – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய தகவல் தொழில் நுட்ப விதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால தடை:
இந்தியாவில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள் 2021 அறிவிக்கப்பட்டது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக செய்தி அனுப்பும் ஊடகங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்கு நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான செய்திகளை அனுப்பும் நபரை கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் இந்த விதிகளுக்கு சம்மதிக்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; 1700 ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து டிஜிட்டல் நிறுவனங்களும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு சம்மதித்து உள்ளது. இந்நிலையில், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் நாடு முழுவதும் உள்ள அச்சு, காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசின் புதிய விதி இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகவும், தனி மனித உரிமையை பாதிக்கும் முறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மும்பை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டிஜிட்டல் பப்ளிஷர்ஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை அக்டோபர் நான்காம் வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.