மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் ஏலம் – டாடா நிறுவனத்தின் முயற்சி!
மத்திய அரசின் தனியார்மயமாக்கும் திட்டத்தில் பல முக்கிய நிறுவனங்கள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் விகிதம் அதிகரித்து. இதனை சரி செய்யும் நோக்கில் மத்திய பட்ஜெட்டின் போது லாபம் ஈட்டாத பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்று லாபம் ஈட்டப்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த வகையில் மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனம் ஏலம் விடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டபோது, யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.
தற்போது ஏர் இந்தியா மேலும், நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முழுவதுமாக 100 % பங்குகளும் விற்கப்படுவதாகவும், அதற்கு செப்டம்பர் 15ம் தேதி இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஸ்பைஸ ஜெட் மற்றும் டாடா குழுமம் ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை பெற முயன்றுள்ளன. இதில் டாடா நிறுவனம் தனது ஏலம் தொகையை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ள ரூ.43,000 கோடி கடனில், ரூ.22,000 கோடி இதன் தாய் நிறுவனமான AIAHL நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம் இந்நிறுவனத்தின் கடன்கள் முழுவதும் அடைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளும் விற்கப்படும் என்றும், ஏர் இந்தியா நிறுவனத்தின் மும்பை கட்டிடம் மற்றும் டெல்லியில் உள்ள ஏர் இந்தியா இல்லம் ஆகியவையும் இந்த விற்பனை திட்டத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.