ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு!

0
ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை - மத்திய அரசு வெளியீடு!
ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை - மத்திய அரசு வெளியீடு!
ஓய்வூதியதாரர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு சுற்றறிக்கை – மத்திய அரசு வெளியீடு!

மத்திய அரசு தனது பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA மற்றும் DR உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை தற்போது மீண்டும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சம்பந்தப்பட்ட துறை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசின் 52 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ஜனவரி 01, 2020, ஜூலை 01, 2020 மற்றும் ஜனவரி 01, 2021 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் DA மற்றும் DR உயர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக DA 17% ஆக இருந்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR 28 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இது முந்தைய DA தொகையை விட இது 11% அதிகம் ஆகும். இந்த DA மற்றும் DR உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 25 முதல் பூங்காக்கள், மத வழிபாட்டு தலங்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை அமைச்சகம் ஓய்வூதிய உயர்வு குறித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2020 ஜனவரி 1 முதல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த ஓய்வூதிய படியானது 17% ல் இருந்து 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது 1 ஜூலை 2021 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உயர்வு மத்திய அரசின் அனைத்து துறை ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும்.

100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!

நாட்டின் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய நீதித்துறை தனியாக அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையைச் சேர்ந்த நபர்களுக்கு அரசியலமைப்பின் பிரிவு 148 (5) இன் கீழ் DR உயர்வு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து துறை அமைச்சகம், அனைத்து மாநில தலைமைச் செயலர்கள், மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!