பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தி வைப்பு? மத்திய அரசு விளக்கம்!
பாதுகாப்பு துறை பணியிலிருந்து ஓய்வு பெறும் அதிகாரிகள் தங்களது துறை பற்றிய ரகசியம் எதையும் வெளியே தெரிவிக்க கூடாது என்றும் இதனை மீறினால் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு படை அதிகாரிகள்:
உளவுத்துறை போன்ற பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களது பணிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்பு தங்களது துறை பற்றிய ரகசியத்தை வெளியிடுவது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குரிய ஓய்வூதியம் குறித்த தகவலும் தெரிவித்துள்ளது. அதன்படி உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தங்கள் துறை பற்றிய தகவலை வெளியிடக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய குடிமைப்பணிகள் திருத்த விதிகள் 2021 ஐ படி, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை கடந்த மே மாதம் 31ம் தேதி வெளியிட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி ஓய்வுபெற்ற பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களது துறை பற்றிய ரகசியங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. துறையில் பணிபுரியும் பொழுது கிடைத்த நிபுணத்துவம், அறிவு உள்ளிட்ட தகவலை பணிபுரிந்த அமைப்பின் தலைவர் அனுமதியின்றி வெளியிட கூடாது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, நாடு முழுவதும் ஒரே மதிப்பீடு முறை – மாநில கல்வி அமைச்சர் கோரிக்கை!!
மேலும் நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பிற நாடுகளுக்கான உறவு ஆகியவற்றிற்கு பிரச்னைகள் ஏற்படுத்தக்கூடிய ரகசியத்தை பகிர்ந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஓய்வுபெற்ற பின்பு ரகசியங்களை வெளியிட மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் அல்லது திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.