நாட்டில் இதுவரை 52 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் இதுவரை 52 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதன்படி, முதலில், முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கும், அடுத்தகட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டது. முதலில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் தடுப்பூசி போடுவதற்கு பயந்தனர். பின்னர் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு அவசர சிகிச்சை – மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 52 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 37,76,765 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 18 – 44 வயது பிரிவில் 20,47,733 பேர் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 4,05,719 பேர் தங்களது இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மாநில வாரியாக 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18,20,95,467 பேர் முதல் டோஸையும், 1,29,39,239 நபர்கள் இரண்டாம் டோஸையும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து இது வரை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 10,45,1548 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 8,09,288 நபர்கள் இரண்டாம் டோஸையும் இது வரை செலுத்திக் கொண்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயதினர் செலுத்திக் கொண்டுள்ளனர்.