9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்ரவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அலுவலகங்களில் 100% அனுமதி!

0
9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்ரவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு - அரசு அலுவலகங்களில் 100% அனுமதி!
9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்ரவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு - அரசு அலுவலகங்களில் 100% அனுமதி!
9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பிப்ரவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அலுவலகங்களில் 100% அனுமதி!

தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பேரலை பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், பிப்ரவரி 7 முதல் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல அலுவலகங்களிலும் 100% பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

டெல்லியில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது அமலில் இருந்து வரும் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை ஒரு மணிநேரம் தளர்த்தி அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இது தவிர சமீபத்தில் நடைபெற்ற டெல்லி தேசிய பேரிடர் மேலாண்மை (DDMA) ஆய்வுகூடத்தில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை பிப்ரவரி 7ம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? வலுக்கும் கோரிக்கை!

என்றாலும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை பல்வேறு கட்டங்களாக நடைபெறலாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது முதலாவதாக, டெல்லியில் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பிப்ரவரி 7 முதல் பள்ளிகள் துவங்கலாம் என்றும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனுடன் ஜிம்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

நாளை (பிப்.5) பொது விடுமுறை அறிவிப்பு – அரசின் உத்தரவு வெளியீடு!

அதே போல அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர் வருகையுடன் வேலை செய்யலாம் என்றும் கார் ஓட்டுபவர்கள் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்புகள் மற்றும் நேர்மறை விகிதம் குறையத் தொடங்கியதற்கு பின்பாக ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதற்கும் அரசு முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!