விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்கள், நாளை விருதுநகரில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவித்து உள்ளார்
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்காக மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மையங்களை நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இந்நிலையில் தமிழக அரசு வாரம் தோறும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது. இதனை ‘வேலைவாய்ப்பு வெள்ளி’ யாக அறிவித்துள்ளது.
சிபிஎஸ்சி 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு – அதிகாரப்பூர்வ தகவல்!!
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட சுகாதார இயக்ககம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை விருதுநகர் கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளியில் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கிறது. 8ம் வகுப்பு முதல் படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து விட்டு மற்ற சான்றிதழ்களை முகாமிற்கு வரும் போது கொண்டு வர வேண்டும். இதற்கான அனுமதி இலவசம். முகாமில் கலந்து கொள்ள இருக்கும் நிறுவனங்கள் அதற்கான கோரிக்கை விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு இணைய தள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்