6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!
குஜராத் மாநிலத்தில் நாளை முதல் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், அனைத்து பள்ளிகளும் கோவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதாலும், நோயின் தாக்கம் குறைந்து வருவதாலும், பள்ளிக்கு வராமல் மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வுக்கு சென்றால் மிகவும் பயத்துடன் தேர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதாலும் மாநில அரசுகள் முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புக்கான நேரடி வகுப்புகளை தொடங்கியது.
10, 12ம் வகுப்புக்கான செயல்முறை தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
குஜராத் மாநில அரசு 10, 12ம் வகுப்பு மற்றும் இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜனவரி 11ம் தேதி முதல் தொடங்கியது. பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரி முதலாம் ஆண்டிற்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கியது. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை விகிதம் 40% இருந்து படிப்படியாக 70% ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 6 முதல் 8ம் வகுப்பிற்கான பள்ளிகள் பிப்ரவரி 18ம் தேதியான நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கியுள்ள கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை முறையை பின்பற்றி வகுப்புகள் தொடங்கப்படும். மாணவர்களுக்கு வருகை கட்டாயம் இல்லை. ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும் என்று கல்வி செயலாளர் வினோத் ராவ் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்