தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் – பிப்.17ம் தேதி போராட்டம்!
தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வரும் 17ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஆர்ப்பாட்டம்:
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக கடந்த 2 வருடங்களாக அரசு துறைகளில் எவ்வித காலிப்பணியிடங்கள் நிரப்ப படவில்லை. போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறாததால் அரசு பணிக்கு செல்ல நினைப்பவர்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. ஏராளமான அரசு ஊழியர்களும் வயது முதிர்வு மற்றும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆட்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இருவர் செய்ய வேண்டிய பணியினை ஒரு ஊழியர்கள் செய்ய வேண்டியதாகி உள்ளது.
Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளோர் கவனத்திற்கு – வட்டி விகிதம் குறைப்பு!
அதனால் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கிறது. விடுமுறை நாட்களில் பணி செய்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து துறை ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுவித்து வந்தனர். பணியாளர்கள் குறைவதால் மக்களுக்கு சேவை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது என்றும் புகார் அளித்தனர். இதுவரை அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததால் போக்குவரத்து ஊழியர்கள் வரும் 17ம் தேதி காலிப்பணியிடங்களை நிரப்புதல், பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய ஆபத்து! அரசு எடுக்கப்போகும் முடிவு!
மேலும் பணியிட மாறுதல்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இது குறித்த கடிதத்தை போக்குவரத்துத் துறை பணியாளர்கள், போக்குவரத்து ஆணையரிடம் வழங்கினர். இக்கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.