ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0
ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!
ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா அவர்கள் அண்மையில் காலமானார். இவரது மறைவையொட்டி அத்தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்:

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திருமகன் ஈவெரா அவர்கள் கிழக்கு தொகுதி MLA ஆக தேர்வு செய்யப்பட்டார். அத்தொகுதியில் பதவி வகித்து வந்த அவர் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் ஜனவரி 4ம் தேதி அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பிறகு இவரது உடல் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இவருக்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அரசு அறிவித்தது.

பட்ஜெட் 2023: சாமானிய மக்களுக்கான நிவாரணம் – குறையும் மருத்துவ செலவுகள்? வெளியான தகவல்!

இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து மார்ச் 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!