இந்திய வங்கிகளில் FD திட்டத்தில் கூடுதல் வட்டி – பயனாளிகள் மகிழ்ச்சி!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கியானது பாலிசி விகிதங்களை உயர்த்தியதை அரசு நாட்டில் இயங்கி வரும் முன்னை தனியார் வங்கிகள் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்ககளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெரும்பாலான மக்கள் முதலீடு செய்துள்ள நிலையான வைப்பு தொகை(FD) குறித்து இப்பதிவில் காண்போம்.
வட்டி விகிதம்:
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி நடப்பு ஆண்டு கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளில் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த FD திட்டத்தில் 7 ஆண்டுகள் முதல் ஒரு வருடம் வரை FD-க்கு 5.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன் பிறகு 6.70 சதவீதமாக வட்டி அதிகரிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டவை.
வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய தகவல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தற்போது முன்னணி தனியார் வங்கிகள் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. அந்த வகையில் HDFC வங்கி 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை 2 கோடி ரூபாய்க்கு குறைவான வைப்புத்தொகைக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தை 6.60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதே போல எஸ்பிஐ வங்கி முதலீட்டாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு 5.60 சதவீத வட்டியை வழங்கி வந்தது இந்த வட்டி விகிதமானது தற்போது 6.10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. தற்போது மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மற்ற வங்கிகளை விட அதிகமாகும். நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் காலமான 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ஐசிஐசிஐ வங்கி முதலீட்டாளர்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கு 6.10 சதவீத வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் FD திட்ட பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்