கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவி முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு – ஹிஜாப் சம்பவம்!
கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்த விவகாரம் தொடர்பான பிரச்சனையில், ஹிஜாப் அணிந்து அல்லாஹு அக்பர் என்று கர்ஜித்து கொண்டு வலம் வந்த கல்லூரி மாணவி முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிப்பு:
கடந்த சில நாட்களாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணி இருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை காரணம் காட்டி வகுப்பறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து உருவான போராட்டத்தில் மொத்த மாநிலமும் கலவரமாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பு மாணவர்கள் காவித்துண்டு அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
IPL 2022: ஹர்திக் பாண்டியா கேப்டனாகும் அணிக்கு “குஜராத் டைட்டன்ஸ்” என பெயர் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
அப்போது ஹிஜாப் அணிந்த படி, இஸ்லாமிய மாணவி ஒருவர் வாகனத்தில் வர, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்த பெண்ணை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்ட படி சென்றனர். அப்போது எவ்வித பயமும் இன்றி ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவி, அல்லாஹு அஃபர் என பதிலுக்கு முழக்கம் இட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்போது போராட்டத்தில் முழக்கம் இட்ட அந்த மாணவியின் துணிச்சலை பாராட்டி ஜமியத்துல் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனை தொடர்ந்து அந்த மாணவிக்கு தற்போது பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை பறிக்க நினைத்த காலிகளுக்கு எதிராக, ஓர் இந்தியக் குடிமகளின் உரிமையை, அஞ்சாமல் நிலைநாட்டிய, மாணவி முஸ்கான் அவர்களுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், கல்வி போராளி ‘பாத்திமா ஷேக் விருது’ வழங்கப்படும்’ என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.