தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விவசாயிகள் குற்றச்சாட்டு!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - விவசாயிகள் குற்றச்சாட்டு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - விவசாயிகள் குற்றச்சாட்டு!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விவசாயிகள் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செட்டிக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரிய அளவு மோசடி நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் தங்கள் குமுறலை வைத்து வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்கு உறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நமது மாவட்டத்திற்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.

தமிழக அரசு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள செட்டி குறிச்சியில் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த சில தினங்களாக 5 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெற்குகோனார்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விவசாய பணிகளுக்காக நகைகளை அடகு வைத்து உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நான்கு முறை 29 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து 62 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில் 40 கிராம் அளவில் வைக்கப்பட்ட தங்க நகைக்கடன் தள்ளுபடி என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, தனக்கு தள்ளுபடி ஆகி இருக்கும் என்று நம்பி கடன் சங்கத்திற்கு சென்றுள்ளார்.

TNPSC DCPO 2022 வேலைவாய்ப்பு – தகுதி, வயது வரம்பு, கட்டணம் & விண்ணப்ப முறை விளக்கம்!

அதனை தொடர்ந்து வெங்கடேஷ் கணக்கில் 41 கிராம் இருப்பதால் தள்ளுபடி இல்லை என்று கூறியதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.தான் 29 கிராம் தான் வைத்திருப்பதாக கூறி அடகு வைத்த அட்டைகளை காண்பித்த போதும் 41 கிராம் தான் கணக்கில் உள்ளது என்று கடன் சங்கத்தினர் கூறியுள்ளனர். அப்படி என்றால் தனது கணக்கில் எவ்வளவு கடன் உள்ளது என்று கூறுங்கள் அதை செலுத்தி விடுகிறேன், 41 கிராம் நகையை திருப்பி தாருங்கள் என்று விவசாயி வெங்கடேஷ் கேட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!