பாரதி கண்ணம்மாவில் இருந்து விடைபெறுகிறாரா வெண்பா பரினா? அவரே சொன்ன விளக்கம்!
பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் வெண்பா காதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவிற்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் சீரியலில் இருந்து விலகுவது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா வெண்பா:
விஜய் டிவி சீரியல்களில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் அந்தந்த கதாபாத்திரமாக வாழ்ந்து வருகின்றனர். பாரதியாக நடிக்கும் அருண், கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி, வெண்பாவாக நடிக்கும் பரீனா, சௌந்தர்யாவாக நடிக்கும் ரூபாஸ்ரீ ஆகியோர் தங்களது நிஜ பெயரை சொன்னால் கூட தெரியாத அளவிற்கு மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் ‘பாக்கியலட்சுமி’ ராதிகா? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் கதைக்கு ஆணி வேராக இருக்கும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கிறது. இதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவாரா? என ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது. ஆனால் சீரியலில் இருந்து விலக மாட்டேன் வெண்பா கதாபாத்திரத்தில் என்னை தவிர யாரும் நடிக்க மாட்டார்கள் என அவர் விளக்கமளித்தார். மேலும் குழந்தை பிறந்த பின் சீரியலில் இருந்து சில நாள் ஓய்வு எடுத்து விட்டு பின் மீண்டும் சீரியலில் தொடருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
‘கண்ணம்மா’ ரோஷினியுடன் ஹேமா எடுத்த கடைசி ரீல்ஸ் வீடியோ – குவியும் லைக்குகள்!
இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினியும் விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்த ராஜு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் அவர் சீரியலில் இருந்து விலகியது போல காட்டாமல் அவர் ஊருக்கு சென்றது போல கதை மாற்றப்பட்டுள்ளது. அது போல வெண்பா கதாபாத்திரத்திற்கு கதையில் மாற்றம் செய்து இடைவெளி விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.