அன்னையர் தினத்தன்று தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய பரினா – வைரலாகும் புகைப்படம்!
பரினாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது. இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து தாய்மாருக்கும் தனது அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பரினாவின் பதிவு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலமாக பிரபலமானவர் தான் பரினா. இவர் இந்த பாரதிகண்ணம்மா தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அதாவது வெண்பாவாக நடித்திருப்பார். வில்லி கதாபாத்திரதிற்கு ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு வரவேற்பு கிடைக்கிறது என்றால் அது கண்டிப்பாக வெண்பா கதாபாத்திரத்திற்கு தான். வெண்பா கதாபாத்திரம்தான் முழுக்க முழுக்க பாரதிகண்ணம்மா தொடரில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. டிஆர்பி இல் பாரதிகண்ணம்மா சீரியல் முன்னிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக வெண்பா கதாபாத்திரம்தான் இருந்து வருகிறது.
அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், அதிர்ச்சியில் ரசிகர்கள் – அடுத்து வரும் திருப்பங்கள்!
பாரதிகண்ணம்மா தொடரில் பரினா நடித்துக் கொண்டிருந்தபோதே கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தாலும் கூட தொடர்ந்து வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்பு பிரசவத்திற்காக சென்றபோது கூட வெண்பாவிற்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெண்பா கதாபாத்திரத்தில் முழுக்க முழுக்க பரினா தான் நடித்துக்கொண்டிருக்கிறார். பிரசவமாகி சில நாட்களிலேயே தனது குழந்தையையும் தூக்கிக்கொண்டு சூட்டிங்கிற்கு வந்துவிட்டார்.
கர்ப்பமாக இருந்த போதும் பல போட்டோக்களை செய்துவந்தார். இது குழந்தைக்கு நல்லதல்ல என பலரும் வெண்பாவை திட்டிக் கொண்டிருந்தனர். ஆனாலும், தனது மகிழ்ச்சிக்காக வெண்பா போட்டோ ஷூட் செய்து கொண்டார். தற்போது வெண்பாவிற்கு அழகிய ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரினா தனது குழந்தையுடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நான் ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறி அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.