கைக்குழந்தையுடன் ‘பாரதி கண்ணம்மா’ சூட்டிங்கிற்கு வந்த வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து தனது குழந்தையின் பிரசவத்துக்காக விலகிய நடிகை பரினா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சீரியலுக்கு திரும்பி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 650 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சூழ்ச்சி காரணமாக பிரிந்திருந்த பாரதியும், கண்ணம்மாவும் மீண்டுமாக ஒன்றிணைந்து ஒரே வீட்டில் வசிக்க துவங்கியுள்ளனர். அதே போல வெண்பாவின் வில்லத்தனம் இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம் இப்போது ரொமான்ஸ் பக்கம் திரும்பி இருக்கிறது.
புதுமண சீரியல் ஜோடி சித்து & ஷ்ரேயாவுக்கு நேர்ந்த சோகம் – வருத்தத்தில் ரசிகர்கள்!
அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவாக நடித்து வந்த நடிகை பரினா தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்காக தற்காலிகமாக இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அதனால் இந்த சீரியலில் வெண்பா கதாப்பாத்திரம் தற்போது ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. மேலும் ‘பாரதி கண்ணம்மா’ கதையில் சில வில்லத்தனம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாந்தி, கண்ணம்மாவின் மாமா என சில கதாப்பாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – புதிய நேரத்தில் ஒளிபரப்பு!
இப்படி இருக்க குழந்தை பிறந்து ஒரு மாதம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் நடிகை பரினா மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த விஷயத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். மேலும் ‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் நடிகை பரினா தனது குழந்தையுடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் சில வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.