பாரதி கண்ணம்மா அஞ்சலிக்கு ஏற்படவுள்ள சோகமான முடிவு – வெண்பா அளித்த பதில்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா. அவர் தற்போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கும் நிலையில் வருகிற எபிசோடில் அஞ்சலி இறந்து விடுவாரா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் ஒன்றை அளித்துள்ளார்.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. சின்னத் தம்பி, ராஜா ராணி 2, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியல் TRPயில் முதலிடத்தை பிடித்தது.
புதிய சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி நடிகை – வெளியான புகைப்படம்!!
இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இவருக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தனது கற்பகாலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி பல சர்ச்சைகளை கிளப்பினார். மேலும் அது பற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதில் பல நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதை பற்றி அவர் கவலை கொள்வதாக இல்லை. இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் வருகிற எபிசோடுகளில் அஞ்சலி இறந்து விடுவாரா? என்ற கேள்விக்கு, அதை எப்படி என் வாயால சொல்வேன் என பரீனா பதிலளித்துள்ளார்.