இந்திய ஓய்வூதியதாரர்களுக்கான அருமையான திட்டம் – மாதம் ரூபாய் 9,250 வரை ஓய்வூதியம்!
ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும் நோக்கத்தோடு பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி வந்தனா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்கள் ரூபாய் 9,250 வரைக்கும் கூட ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம்.
ஓய்வூதியம்:
இந்தியாவில் அஞ்சல் மற்றும் வங்கித் திட்டங்கள் பொதுமக்களுக்கு எக்கச்சக்கமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி வந்தனா யோஜனா திட்டத்தின் மூலமாக ஓய்வூதியதாரர்கள் சிறப்பான பலனை பெற முடியும். முதன்முறையாக இந்த எல்ஐசியின் புதுமை திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதற்குப் பின்னர் மார்ச் 31ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு வரைக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மார்ச் 31 2023 ஆம் ஆண்டு வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 1000, ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூபாய் 3000, அரையாண்டிற்கு ரூபாய் 6000 மற்றும் ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் வரைக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.9250, காலாண்டு முடிவில் ரூ.27750, ஆண்டுக்கு ரூ.1,11,000 வரை ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 12 லட்சம் வரைக்கும் முதலீடு செய்துகொள்ளலாம்.
CUET 2022 தேர்வு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும், எல்ஐசியின் இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் மாதத்திற்கு 7.4% வட்டியும், காலாண்டு ஓய்வூதிய வட்டி 7.45 சதவீதமும், அரையாண்டு ஓய்வூதிய வட்டி 7.52 சதவீதமும், ஆண்டு வட்டி 7.66% சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பாலிசி துவங்கப்பட்டு இடையிலேயே பாலிசிதாரர் இறந்துவிட்டால் அந்த முதிர்வுத் தொகை நாமினிக்கு திருப்பி அனுப்பப்படும் எனவும், பாலிசி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம் எனவும், 75% வரைக்கும் கடன் வழங்கும் வசதி இந்த திட்டத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்