மத்திய அரசு ஊழியர்களுக்கு அருமையான அறிவிப்பு – ஊதிய உயர்வுக்கான சூத்திரத்தில் மாற்றம்!
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 34% அகவிலைப்படி உயர்வை பெற்று வருகின்றனர். இதையடுத்து தற்போது அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு கணக்கிடப்படும் சூத்திரத்தை மாற்றியுள்ளது.
ஊதிய உயர்வு
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அரசு ஏராளமான செலவினங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு கடந்த 2020ம் ஆண்டு நிறுத்திவைக்கப்பட்டது. அத்துடன் 18 மாத கால நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% அதிகரிக்கப்பட்டு 28% அகவிலைப்படி வழங்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி 31% அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து 18 மாத கால நிலுவை தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசு இதனை வழங்க மறுத்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு Aykroyd சூத்திரம் பரிசீலிக்கப்படலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – இ நாமினேஷன் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தற்போது கணக்கிடப்பட்டு வருகிறது. அத்துடன் 6 மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசிகளின் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும். ஆனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்படாது. இந்த நிலையில் புதிய சூத்திரத்தின்படி ஊழியர்களின் சம்பளம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு மற்றும் பணியாளரின் செயல்திறன் உள்ளிட்டவை இணைக்கப்படும். இதனால் ஊழியர்களின் சம்பளமும் ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்வும் என்று கூறப்படுகிறது.