சமூக வலைதள பக்கத்தில் ஸ்ரீநிதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் – சீரியலை விட்டு செல்ல முடிவு!
வலிமை திரைப்படம் வெளியான போது வலிமை திரைப்படத்தை பற்றி அவதூறாக பேசியதால் தற்போது வரைக்கும் ஸ்ரீநிதியை ரசிகர்கள் திட்டி கொண்டிருக்கின்றனர். இதனால் ஸ்ரீநிதி தற்போது நடித்து கொண்டிருக்கும் சீரியலில் இருந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
ஸ்ரீநிதி:
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரீநிதி. ஸ்ரீநிதி இதுவரை ஏகப்பட்ட திரைப்படங்களிலும், விளம்பர திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது ஸ்ரீநிதி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்கிற தொடரில் தர்ஷினி என்கிற கதாபாத்திரத்தில் தர்ஷினி நடித்து வருகிறார். வலிமை திரைப்படம் வெளியானதில் இருந்தே ஸ்ரீநிதியை ரசிகர்கள் வலைதள பக்கங்களில் திட்டி தீர்த்தனர்.
Exams Daily Mobile App Download
அதாவது தமிழகம் முழுவதும் வலிமை திரைப்படத்திற்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த வலிமை திரைப்படம் தியேட்டரில் வெளியான முதல் நாளே ஸ்ரீநிதி அவரது நண்பர்களுடன் வலிமை திரைப்படத்திற்கு சென்றுள்ளார். வலிமை திரைப்படம் எப்படி இருந்தது என ஸ்ரீநிதியிடம் கேட்ட போது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை என வலிமை திரைப்படம் குறித்து மிகவும் அவதூறாக பேசியுள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கோபியா இது? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!
ஸ்ரீநிதி வலிமை திரைப்படத்தை பற்றி தவறாக பேசியதால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் கடுப்பாகினர். இதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே எனக்கு வலிமை திரைப்படம் எப்படி இருந்ததோ அதை மட்டும் தான் கூறினேன் என கூறினார். இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை சமூக வலைதள பக்கங்களில் திட்டி தீர்த்து விட்டனர். தற்போது வரை ஸ்ரீநிதிகு ரசிகர்களின் மத்தியில் ஒரு எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீநிதி தற்போது நடித்து கொண்டிருக்கும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்மறை விமர்சனங்களால் விலகுகிறாரோ எனவும் தகவல் பரவி வருகிறது.