விஜய் டிவி சீரியல்களில் அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்? ஷாக் ஆகும் ரசிகர்கள்!
சீரியல் உலகில் தனி இடத்தை பிடித்து மக்களின் மனம் கவரும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் அடுத்தடுத்து பல முக்கிய நடிகர்கள் விலகி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் தொடர்ந்து அதிர்ச்சியில் உள்ளனர்.
விலகும் நடிகர்கள்:
விஜய் டிவியில் சீரியல்கள் வந்த பிறகு தான் சீரியல்களுக்கு என்று எழுதப்பட்டிருந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்டது என்று சொல்லும் அளவிற்கு விஜய் தொலைக்காட்சியில் புது புது கதைகளை கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகியது. இதனால் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் சேரத் தொடங்கினர். காலப்போக்கில் விஜய் டிவியின் சீரியல்கள் தான் சின்னத்திரை டிஆர்பி யில் முதல் இடங்களை பிடித்து வந்தது. இதனால் பல முன்னணி நடிகர், நடிகைகளும் சீரியல்களை நோக்கி படை எடுக்கத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக விஜய் டிவியின் ப்ரைம் நேர தொடர்களில் இருந்து முக்கிய நடிகர், நடிகைகள் விலகி வருகின்றனர். முன்னதாக பாரதி கண்ணம்மா தொடரில் கதையின் நாயகியான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி முதல், அகிலன், ஸ்வீடி என்று வரிசையாக பலரும் வெளியேறினார்கள். இதனால் கதையில் சில நாட்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர், மீண்டும் அதிரடியான திருப்பங்களை கொண்டு வந்து ரசிகர்களை ஈர்க்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் தொடக்கம் – அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில், தற்போது ராஜா ராணி 2 சீரியலும் இணைந்துள்ளது. முன்னதாக பிரசவம் காரணமாக ஆல்யா மானசா சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு சமீபத்தில் தான் அர்ச்சனா எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது, ராஜா ராணி 2 சீரியல் ஹீரோ சித்து சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வருகிறது. அதேபோல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா அறிவுமணி அவர்களும் விளக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் டிவியின் சீரியல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்