‘IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க’ – RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!

0
'IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க' - RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!
'IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க' - RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!
‘IPL ஐ விட்டுவிட்டு ஆட்டோ ஓட்ட போங்க’ – RCB வீரர் முகமது சிராஜை சாடிய ரசிகர்கள்!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கடந்த ஆண்டு IPL தொடரில் சிறப்பாக பந்துவீசி பவர்பிலேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்த ஆண்டு IPL தொடருக்கான RCB அணி முகமது சிராஜை தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் சமீபத்தில் தனது IPL வாழ்க்கை குறித்து சிராஜ் பேட்டியளித்துள்ளார்.

முகமது சிராஜ் பேட்டி:

இந்த ஆண்டு IPL ஏலம் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்தனர். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, 590 வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்கிறார்கள். இந்த 590 வீரர்களின் 228 பேர் சர்வதேச வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிராத 355 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளதில் 370 பேர் இந்திய வீரர்கள்; 220 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் – திருப்புதல் தேர்வு மாற்றம்?

ஐபிஎல் 15 வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்தது. அதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி 15 கோடி ரூபாய்க்கும், கிளென் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது.

LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் சமீபத்தில் தனது IPL வாழ்க்கை குறித்து சிராஜ் பேட்டியளித்தார். அதில் 2019 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக நான் அந்த இரண்டு பீமர்களை வீசியபோது, மக்கள் கிரிக்கெட்டை விட்டுவிட்டு திரும்பிச் சென்று உங்கள் தந்தையுடன் ஆட்டோ ஓட்டுங்கள் என்று சொன்னார்கள் என்று கூறினார். மேலும் இதுபோன்ற பல கருத்துக்கள் இருந்தன. ஆனால் நான் இந்த ஆண்டு RCB அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி என்னைப் பற்றி மக்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டாம் என்று என்னிடம் கூறினார். அதை நான் இன்று வரை கடைபிடிக்கிறேன் என்று சிராஜ் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!