பாரதி கண்ணம்மா தொல்லை தாங்க முடியவில்லை, கதறிய ரசிகர் – பதில் கொடுத்த வில்லி வெண்பா!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால் அவர் மீண்டும் சீரியலுக்கு வர வேண்டும் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார்.
பாரதி கண்ணம்மா வெண்பா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கு அடுத்தபடியாக வில்லியான வெண்பா முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறது. இந்நிலையில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சீரியலில் அவர் ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டு, அவர் குழந்தையுடன் ஓய்வில் இருக்கிறார்.
ஆர்யனுடன் திருமணத்திற்கு பின்னர் ‘செம்பருத்தி’ ஷபானாவின் நெகிழ்ச்சியான பதிவு – குவியும் லைக்குகள்!
இதனால் கதையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்ந்து வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இருவருக்கும் நெருக்கமான காதல் காட்சிகள் அதிகம் வைக்கப்பட்டுள்ளது. அதனால் சீரியல் நன்றாக இருந்தாலும் சில சிங்கிள் பசங்கள் பொறாமை கொண்டு வெண்பா வில்லி வந்தால் இப்படி நடக்குமா என புலம்பி வருகின்றனர். மேலும் சீரியலில் வெண்பாவை தற்போது வரை காட்டப்படவில்லை. அதனால் வருத்தப்பட்ட ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் கமெண்ட் செய்துள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லை காவ்யாவுடன் இணைந்த ஜீவா வெங்கட் – ரசிகர்கள் வாழ்த்து!
அதில் தயவு செய்து சீக்கிரம் சீரியலில் வாங்க, அந்த பாரதி கண்ணம்மா சேர்ந்து செய்வதை எல்லாம் பார்க்க முடியவில்லை. சீக்கிரம் வந்து அவர்களை பிரித்து விடுங்கள் என சொல்லி இருக்கிறார். அதற்கு பரீனாவும் சீக்கிரம் வந்துறேன் என பதில் கொடுத்து இருக்கிறார். மேலும் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் பரீனா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். விரைவில் அவர் கதையில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.