டிக்டாக் பிரபலம் சுகந்தி தேனியில் திடீர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை!
நாடு முழுவதும் டிக் டாக் செயலி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வந்தது. டிக் டாக் செயலியை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டனர். அந்த டிக் டாக் செயலி மூலம் நிறை பேர் பிரபலங்களாக மாறியுள்ளனர்.
டிக் டாக் சுகந்தி:
நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்த குறைந்த நாட்களிலே அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது தான் ‘டிக் டாக்’ செயலி. இந்த டிக் டாக் செயலியை பெரும்பாலானோர் தங்களது திறமைகளை வெளிக்கொணரும் விதமாக பயன்படுத்தினர். அதாவது நடனம் ஆடுதல், பாட்டு பாடுதல், பலகுரல் பேசுதல் என்று அவர்களது திறமைகளை இந்த செயலி மூலம் வெளிப்படுத்தினர். சிலர் அந்த செயலியை தவறான முறையில் பயன்படுத்தினர். பெரும்பாலான மக்கள் தினசரி இந்த செயலியை பயன்படுத்துவதில் தங்களது முழு நேரத்தையும் செலவிடும் வகையில் இந்த செயலி மக்களிடத்தில் இடம் பிடித்தது.
கமலை பேச விடாமல் வாக்குவாதம் செய்த பாவ்னி & தாமரை – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
இதன் மூலம் பல்வேறு குடும்பங்களுக்குள் சண்டை கூட நிகழ்ந்துள்ளது. இந்த டிக் டாக் செயலி மூலம் பலர் திரையுலகிற்கு சென்றுள்ளனர். இவ்வாறாக இந்த டிக் டாக் செயலி மூலம் நல்லதும், கெட்டதும் நிகழ்ந்துள்ளன. அதன் பின்னர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த டிக் டாக் செயலி முடக்கப்பட்டு விட்டது. இத்தகைய டிக் டாக் மூலம் பிரபலமான ஒருவர் தான் தேனி நாகலாபுரத்தை சேர்ந்த சுகந்தி என்பவர். இவர் பல்வேறு ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போன தனத்தின் குழந்தை, பதறும் அம்மா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!
இவர் ஒரு சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டிக் டாக் சுகந்தியின் மேல் புகார் அளித்துள்ளார். அவ்வாறு அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மதுரை சைபர் கிரைம் போலீசார் சுகந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கின் அடிப்படையில் சுகந்தியை தேனியில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.